எங்கே இருக்கிறாய் இன்னும்..
ஏளனமெய்ய அருகே இருகோள் அழைத்து என்னைக்
கேலிசெய்யும் வானில் வெண்ணிலவின் பிறை!
வீதியெல்லாம் ஒளிகள் பால்வெளியில் வந்து எனக்கு
சேதிசொல்லும் நானோ நீயில்லாததன் குறை; என்
விண்ணை விரிக்க வரும் விண்மீனே,
எங்கே இருக்கிறாய் இன்னும்..
மின்னிக்கொண்டு?
நீயின்றி நானும் தனியாய் போவதைக் கண்டு
நின்றுவிடும் பட்டப்பகல் போலஎன் நிழல்!
தூதுவிடத் தென்றல் காற்றும் காதல் கொண்டு
ஊதிவரும் மூங்கில் காட்டில் குழல்; என்
நிலத்தில் நடக்க வரும் நந்தவனமே,
எங்கே இருக்கிறாய் இன்னும்..
மேலும் படிக்க..”எங்கே இருக்கிறாய் இன்னும்..”
December 5, 2008 - 12:55 PM சாரல்கள் (13)




