தூரல்

பெய்யெனப் பெய்யும் தமிழ்

எங்கே இருக்கிறாய் இன்னும்..

வெண்ணிலவின் கேலிப்புன்னகை

ஏளனமெய்ய அருகே இருகோள் அழைத்து என்னைக்

கேலிசெய்யும் வானில் வெண்ணிலவின் பிறை!

வீதியெல்லாம் ஒளிகள் பால்வெளியில் வந்து எனக்கு

சேதிசொல்லும் நானோ நீயில்லாததன் குறை; என்

விண்ணை விரிக்க வரும் விண்மீனே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மின்னிக்கொண்டு?

மூங்கில் குழல் தூது

நீயின்றி நானும் தனியாய் போவதைக் கண்டு

நின்றுவிடும் பட்டப்பகல் போலஎன் நிழல்!

தூதுவிடத் தென்றல் காற்றும் காதல் கொண்டு

ஊதிவரும் மூங்கில் காட்டில் குழல்; என்

நிலத்தில் நடக்க வரும் நந்தவனமே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மலர்ந்துக்கொண்டு?

மேலும் படிக்க..”எங்கே இருக்கிறாய் இன்னும்..”

குறிச்சொற்கள்: , ,
December 5, 2008 - 12:55 PM சாரல்கள் (13)