<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.6.3" -->
<rss version="0.92">
<channel>
	<title>தூரல்</title>
	<link>http://thogai.in/thooral</link>
	<description>பெய்யெனப் பெய்யும் தமிழ்</description>
	<lastBuildDate>Fri, 05 Dec 2008 13:34:32 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>எங்கே இருக்கிறாய் இன்னும்..</title>
		<description>  
ஏளனமெய்ய அருகே இருகோள் அழைத்து என்னைக்

கேலிசெய்யும் வானில் வெண்ணிலவின் பிறை!

வீதியெல்லாம் ஒளிகள் பால்வெளியில் வந்து எனக்கு

சேதிசொல்லும் நானோ நீயில்லாததன் குறை; என்

விண்ணை விரிக்க வரும் விண்மீனே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மின்னிக்கொண்டு?
  
நீயின்றி நானும் தனியாய் போவதைக் கண்டு

நின்றுவிடும் பட்டப்பகல் போலஎன் நிழல்!

தூதுவிடத் தென்றல் காற்றும் காதல் கொண்டு

ஊதிவரும் மூங்கில் காட்டில் குழல்; என்

நிலத்தில் நடக்க வரும் நந்தவனமே,

எங்கே இருக்கிறாய் இன்னும்..

மலர்ந்துக்கொண்டு?
  
பாவை உன்கால் போகும் வழிஆகப் ...</description>
		<link>http://thogai.in/thooral/2008/12/thedal/</link>
			</item>
	<item>
		<title>ஈழக்கதவுகள் - சூரியதீபன்</title>
		<description>ஈழக் கதவுகள்
- பா. செயப்பிரகாசம் (சூரியதீபன்)
தோழமை வெளியீடு, ரூ.100, முதல் பதிப்பு - சனவரி 2007, 160 பக்கம்





[caption id="attachment_57" align="alignnone" width="198" caption="ஈழக் கதவுகள் - முன்னட்டை"][/caption]


[caption id="attachment_58" align="alignnone" width="200" caption="ஈழக் கதவுகள் - பின்னட்டை"][/caption]


2002-ல் 'மானுடத்தின் தமிழ்க்கூடல்' மாநாட்டுக்கு யாழ் போயிட்டு வந்த எழுத்தாளர் சூரியதீபன், தன் பயண  நிகழ்வுகளை, கவிதைகளும் மேற்கோளும் கதைகளும் நிகழ்ச்சிகளும் கலந்த கட்டுரைகளாக் கொடுத்திருக்காரு. மாநாடு நடக்கறப்ப அங்க ...</description>
		<link>http://thogai.in/thooral/2008/11/eezhakkathavugal/</link>
			</item>
	<item>
		<title>தெலுங்குதேசத்துல தமிழ்த்தாலாட்டு</title>
		<description>அண்மையில பிறந்தநாள் வந்துச்சு. ஆண்டுக்கு ஒருமுறை பிறந்தநாளுக்கு மட்டும் இறைவனை நினைத்துக் கோவிலுக்குச் செல்லும் நம்மத் தலைமுறையோட வழக்கமா, அலுவல்களுக்கு இடையில அடிச்சுப் புடிச்சுப் போறதுக்குள்ள, 'சீதாராமாஞ்சனேயா தேவாலயத்'துல ராமரோடச் சுற்றுப்புறச் சகாக்கள்-லாம் கதவைச் சாத்திக்கிட்டுத் தூங்கப் போயிட்டாங்க, ராமரும் சீதையக் கூட்டிக்கிட்டுத் தூங்கப் போலாம்னு இருந்தாரு.

நாள்முழுக்கத் தனக்குப் புரியாத வடமொழியிலும் இன்னபிற மொழிகளிலும் இறைவனை ஓதி, தன் "கடன் பணிசெய்துக் கிடப்பதே" என்று வசூலில் இருந்த ஐயர், ராமரைத் ...</description>
		<link>http://thogai.in/thooral/2008/11/thaalattu/</link>
			</item>
	<item>
		<title>செல் பே(சி)ச்சு</title>
		<description>ம்ம்.. அது ஒரு காலம். மூணு வருஷம் ஆச்சு, நான் அவுருகூட வந்து. அப்பலாம் எங்குளுக்கு ரொம்ப புதுசு. அவ்ள பேரு எங்கள வச்சுக்க வசதி கெடயாது. எங்கூட இருந்தவளுங்கலாம் அசிங்கமா, குண்டா, பெருசு பெருசா இருந்தப்ப, நாமட்டும் ரொம்ப அழகா, ஒல்லியா, குட்டியா இருந்தேன். அதேன் அவுருக்கு புடிச்சிருந்துச்சு. வந்து பாத்தவரு வச்சகண் வாங்கல. ஒடனே கூட்டிக்கினு வந்துட்டாரு.
அவுருக்கு வேற எம்புகழ பாடறதுனா சொல்லவே வேணா; ஊருக்கே சொல்லுவாரு. ...</description>
		<link>http://thogai.in/thooral/2008/11/cellpechu/</link>
			</item>
	<item>
		<title>கள்ளிப்பால் காவியம்</title>
		<description>சிதறிக் கொண்டிருந்தது செடியிலிருந்து பால்,
&#160;&#160;&#160;அழத் தொடங்கினாள் குழந்தை பிறப்பில்..
கதறிக் கொண்டு அழுதாள் தன் தவிப்பால்,
&#160;&#160;&#160;விழத் தொடங்கினாள் பாழுங்கிணற்றில்..

தன்னைப் படைத்தவனுக்காக அழுதாள்,
&#160;&#160;&#160;அணைத்திருக்கும் தன் அன்னைக்காக..
தன்னைப் பெண்ணாக்கியவனுக்காக அழுதாள்,
&#160;&#160;&#160;துணைப் போனத் தன் தந்தைக்காக..

பெண்ணின் போற்றாப் பெருமைக்காக அழுதாள்,
&#160;&#160;&#160;ஆணைமட்டும் பிரித்துப் போற்றுவோருக்காக..
பெண்ணின் பெருமையறியா இவ்வுலகுக்காக அழுதாள்,
&#160;&#160;&#160;ஆணாதிக்கம் அடையப் போகும் அழிவுக்காக..

தொட்டில் குழந்தைத் திட்டத்துக்காக அழுதாள்,
&#160;&#160;&#160;அதில்கூட தன்னைப் போடவிழையா பெற்றோருக்காக..
கட்டிலில் கண்ணுறங்குபவளின் கையாலாகாமல் அழுதாள்,
&#160;&#160;&#160;எதில் போட்டாலும் திருந்தா தன் உறவினருக்காக..

தன்னைக் கொள்ளப் போகும் கள்ளிக்காக அழுதாள்,
&#160;&#160;&#160;கள்ளியிலிருந்து ...</description>
		<link>http://thogai.in/thooral/2008/11/kallippaal/</link>
			</item>
</channel>
</rss>
